Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

நீல அவஸ்தை : சில கவிதைகள்

வே.நி. சூர்யா
வே.நி. சூர்யா
November 1, 2025
நீல அவஸ்தை : சில கவிதைகள்

1

அவள்: நீல நிறத்தைக் கொதிக்க வைத்துவிடு
அவன்: இரவு வந்துவிட்டதே

2

இரவுக்கு லட்சக்கணக்கான வருடும் கைகள்
இருப்பதோ இரண்டு உடல்கள்
எல்லாவற்றின் மீதும் மேனி வெளிச்சம்

3

ஒரு உதட்டசைவு
பள்ளமாக்கிவிட்டது என் நிழலை.

4

இரவு ஓர் எலுமிச்சையைப் போல என்னைக் கசக்கிப் பிழிகிறது
நான் என்னை விட்டுவிட்டு
உலகை விட்டுவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறேன்

5

என் நாவு உன் நாவுக்குக் கீழே,
இரண்டு கண்டத்தட்டுகள் நகர்கின்றன.

6

உன் பின்னங்கழுத்தில்
நான் முகாமிட்டுள்ளேன்
திரட்டிவந்த முத்தங்களுடன்

7

என் உதடுகள் உன் செவிகளில்
உன் கூர்நகங்கள் என் முதுகில்
அல்லி மலர்க்கூரைகளில் மழை. 

8

உன் கால் விரல்நுனியில் உதடுகளைப் பதிக்கிறேன்
இன்னும் எத்தனை கோடி உலகங்கள் உள்ளனவோ

9

இந்தப் படுக்கை ஒரு காகிதம்,
நீயும் நானும் வார்த்தைகள்,
எழுத்துகள் கலைகின்றன ஒவ்வொரு அசைவுக்கும்,
வார்த்தைகளின் மத்தியானம் மெல்ல அந்தியை
நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது

10

உன் காது மடல்களில்
ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல என் வாய்.
சொற்களுக்குப் பதில் 
என் மூச்சுக்காற்றைக் கேட்கிறாய்
அதிர்வுகளினூடே எனக்கு நீ பதில் கூறுகிறாய்

11

விரல்களால் தொடுகிறேன்
நாவால் தொடுகிறேன்
உன்னை ஒரு முறை தொடும்போது
நீ எப்படிக் கணக்கேயில்லாமல்
என்னைத் தொடுகிறாய்?
தொடுகையின் அட்சயப்பாத்திரமா நீ?

12

உன் உதட்டு வரிகள் திடுமெனச் சிறைக்கம்பிகள் ஆகின்றன
என் முழு உலகமும் சிறையிலிருக்கிறது,
ஒரு மதுரச் சிறை.
முகமூடியணிந்த மரம்
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்ததா? 

13

உன் பெயரின் ஒவ்வொரு எழுத்திலும்
என் வாய் ஈரம்.
இன்னும் அது காயவில்லை

14

உன் உடலுக்குள் என் உடல் விழுந்துவிட்டது
அதோ
ஆழ
ஆழ 
ஆழ 
அது மூழ்குகிறது
நீர் வளையங்களுக்குப் பதில்
மின்னல் வளையங்கள்

15

நேற்று இரவு முழுவதும்
நீ என் அறையாக இருந்தாய்
நான் சன்னல்களைக் கூட திறக்கவில்லை

16

காஃபியின் நறுமணம் என் ஒரு கையைப்
பிடித்துக்கொண்டது
ரோஜாவின் நறுமணம் மற்றொரு கையைப்
பிடித்துக்கொண்டது
உன் நறுமணம் என் மார்பின் மீது
தன் வாளிப்பான ஒரு காலை வைத்தபடி
நின்றுகொண்டிருக்கிறது

17

உன் நகங்கள் பதிந்த இடங்கள் காலத்துக்கு
வெளியே செல்கின்றன
உன் நகங்கள் பதியாத இடங்கள்
காலத்துக்குள் உள்ளன.
தபால் பெட்டியின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட கடிதம் போல
நான் மாட்டிக்கொண்டேனா?
என்ன விந்தை இது?

18

உன் அக்குளில் முகம் புதைத்திருக்கிறேன்
காற்றைச் சுவாசிக்கும் வழமையிலிருந்து 
நான் விடுபடுகிறேன்.
உன் வாசனை,
என்னை உள்ளிழுக்கிறது,
வெளிவிடுகிறது.

19

கண்தொடும் நிலக்காட்சிகளை எல்லாம்
ஒரு கோதுமை ரொட்டியெனக் கையில் எடுத்து
நெய்க்குப் பதிலாக
உன் வாசனையைத் தடவி
உண்ண முயலும்
இந்தப் பசி.

20

உடலில் ஆரம்பித்து
மொழியின் படித்துறைகளைக் கடந்து
நீ சுழித்துச் சுழித்து
எல்லா இடங்களிலும்
என்னை மூழ்கடித்தபடி
பாய்ந்தோடுவதை நான் பார்க்கவேண்டும்
இப்பொழுதே இந்நொடியே
உன் சில்லிடும் பாதத்தை
இந்தக் காகிதத்தில் வையேன்

21

உன் மார்புக்கச்சையின் ஒரேயொரு ஊக்கு,
எல்லாவற்றுக்கும் கதவாக
என் முன்பு நிற்கிறது.
பரவசாதீதத்திற்கு முந்தைய தகிக்கும் கணம்

22

தகிக்கும் உன் மார்புக்கச்சை ஒரு பறவைதான் போல. 
படுக்கை எனும் கிளையிலிருந்து
அது பறந்துவிட்டது

23 

இரவுநேர நதியில் கிடப்பது போல உன் முலைகளில் ஆழ்ந்திருக்கையில்
உன் உதடுகளின் தனிமை என்னை வருத்துகிறது
உன் பின்னங்கழுத்தில் பயணத்தைத் தொடங்கும்போது
உன் முலைகள் என்னை அழைக்கின்றன
ஓரிடத்தில் இருக்கும்போது
உன் மற்ற அங்கங்கள் ஒவ்வொன்றும்
என்னை அழைப்பதுதான் என்னடி?
எனக்கு நிறைய உடல்கள் இருந்திருக்கலாம்

24

உன் முலைகளில் பற்களைப் பதித்தால்
இந்த அந்தரங்க இரவின் மீது
என் பற்தடம் பதிவதுதான் என்ன?

25

இன்று இரவு 
உன் முலைகளே என் தெய்வம்
எச்சிலாலும்
மூச்சுக்காற்றாலும்
கைகளாலும்
தொழுகிறேன்
என் பிரார்த்தனைகளைச் சொல்கிறேன் இச்சையின் மொழியில்.

26

உன் முலைக்காம்பு ஒரு தூண்டில் முள்ளைப் போல
நெடுநேரம் என் வாயில் கிடக்கிறது
அதோ உயிர்
உடலைவிட்டுவிட்டு
மீன் வடிவில்
அகோரப் பசியுடன்
வந்துகொண்டிருக்கிறது

27

என் உதடுகளுக்கு நினைக்கத் தெரியும் போல.
உன் முலைகளில் வாழ்ந்த நாட்களை
உன் கீழ் உதடுகளில் நிகழ்ந்த விருந்துகளை 
நினைத்துக்கொண்டிருக்கிறது
நான் என் உதடுகளை ஈரமாக்கிக்கொள்கிறேன்

28

உன் விரல்களால் என்னை வருடுகிறாய்
என்னைக் கூட அல்ல
என் பிறவிகளை வருடுகிறாய்
கறுப்பு வயலில் என்றுமில்லாத விளைச்சல்

29

நீ என் செவியினுள் விரலை நுழைக்கிறாய், எடுக்கிறாய்
நீ அளிக்கும் மோனமும்
இந்த உலகத்தின் இரைச்சல்களும்
மல்லுக்கட்டுகின்றன
நான் என் வியர்வைத் துளிகளால்
உன் விழிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் 
எனக்குள் ஆங்காங்கே படீர் படீரென நீல நிறம் வெடித்துச் சிதறுகிறது

30

இந்த ஈர நாவு
கட்டக்கடைசியில்
ஒரு சிவப்பு நிறத் துணிதான் போல.

31

எழுதுகிறேன், வார்த்தைகள் மறுபக்கத்தில் பதிவதைப் பார்க்கிறேன்
என் உடல் உன் உடல் மீது பதிகிறது,
ஆனால் மறுபக்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
என் உடல் உன் வழியாக எங்குதான் போகிறது?

32

உன் கூந்தலில் இருந்து வரும் இரவுகளில்
உயிரெழுத்துகள்,
ஒளிரும் மலர்கள்,
குளிர்,
மஞ்சள் வெளிச்சம் என
ஏதேதோ உள்ளன
தூக்கத்தை மட்டும் காணவில்லை

33

படுக்கையினின்று
என் தோள்களை
இரு கையால் பிடித்தபடி
நான்கைந்து நீண்ட முத்தத் தொலைவிலிருந்து
உனக்கு மேலிருக்கும் என்னைப் பார்க்கிறாய்
நம் ஏதேதோ பிறவிகளின் படுக்கையறைக்கு
வழிகாட்டும்
ஒரு வரைபடமா நான்? இல்லை
ஒரு கண்ணாடியா?

34

நேற்று திடுமெனத் திரும்பிப் பார்க்கும்போது
ஏரியின் முகப்பில் வீற்றிருந்த
நம் அறை
என்னைப் பின்தொடர்ந்து
வருவதைப் பார்த்தேன்
இன்னும் நாம் உள்ளே இருக்கிறோமா
ஆடைகளின்றி
அந்தப் பட்டுப்பொன் வெளிச்சத்தில்?

35

இந்த அந்தி போல உன் உடல்
ஆங்காங்கே சிவந்திருந்தது என்றாய்
என் உடலின் எல்லைக்கோடுகள் அழிகின்றன மெதுமெதுவாக.

36

இன்னும் தொடுகையின் கரையில்
வந்து இறங்கவில்லை.
எனது கப்பலில் இருந்து பார்க்கிறேன்
உன் மேனிக்கும்
என் விரல்களுக்கும் இடையே சுறாக்கள்
வளைய வருகின்றன.
புயற்காற்றும் வீசுகிறது.
இது காமத்தின் கொடுங்கடல்.

37

நீயும் நானும் இங்கு வந்து நின்றோமா?
அறையின்
கண்ணாடிக் கதவு
முழுதும் நீராவிப் படலம்.

38

மழை தன் நனைந்த உள்ளாடையைக் 
கழற்றி எறிந்துவிட்டு 
கறுப்புத்துணியால் இரவின் கண்களைக் கட்டிவிட்ட கணம் அது
சட்டென எனக்கு நான்கு பேராக மாற வேண்டுமென்றிருந்தது
நால்வருக்கும் என் உருவம், என் குரல், என் வாசனை. 
படுக்கையில் ஒரேநேரத்தில்
நான்கு பேரின் விழிகளைக்
காண முடியாமல்
பரவசத்தில் 
நீ திணறுவதைப்
பார்க்க ஏன் இவ்வளவு விரும்புகிறேன்?


Art : etsy

வே.நி. சூர்யா
வே.நி. சூர்யா

வே.நி.சூர்யா நாகர்கோவில் அருகே பறக்கை என்னும் ஊரில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

கரப்பானியம் (2019), அந்தியில் திகழ்வது (2022) ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டுள்ள வே.நி.சூர்யா பல்வேறு சிற்றிதழில் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் மொழியாக்கச் செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். வே.பாபு நினைவு கவிதை விருது, ஸ்பாரோ இலக்கிய விருது, விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

Share :

2 responses to “நீல அவஸ்தை : சில கவிதைகள்”

  1. போஸ் பிரபு
    November 10, 2025

    ❤️❤️❤️ சிறப்பான கவிதைகள்

    Reply
  2. Selvam kumar
    November 11, 2025

    அருமை, அற்புதம்,,

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025
  • வண்ணார் : வரலாறும் வலிகளும்

    வண்ணார் : வரலாறும் வலிகளும்

    December 2, 2025
  • பொலி எருமை

    பொலி எருமை

    December 2, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (1)
  • கட்டுரை (67)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)

Archives

  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (1)
  • கட்டுரை (67)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top