Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

இன்கா நாடோடிக்கதைகள் – 9 : உட்கா பாக்கரும் உட்கா மைத்தாவும்

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
April 1, 2026
இன்கா நாடோடிக்கதைகள் – 9 : உட்கா பாக்கரும் உட்கா மைத்தாவும்

இது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை. எவ்வளவு காலம் என்று யாருக்கும் தெரியாது. சிலர் இந்தக் கதை இன்கா பேரரசு காலத்தைச் சேர்ந்தது என்கிறார்கள். மற்றவர்களோ இது அதற்கும் முற்பட்டது என்று நம்புகிறார்கள்.

ஒரு பெரிய மலையின் சரிவில், அவாபாந்தி என்ற முதிய செல்வந்தரின் அரண்மனை இருந்தது. அவர் ஒரு பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்து வந்தார். அந்த அரண்மனைக்கு மேலே பனி படர்ந்த மலைச்சிகரம் இருந்தது; கீழே ஒரு நதி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நதிக்கு அப்பால் முடிவில்லாத குன்றுகள் பரவி இருந்தன. பருவகாலங்களில், அந்த நிலங்கள் உருளைக்கிழங்குத் தோட்டங்களாலும் சோள வயல்களாலும் நிறைந்திருக்கும்.

இந்த முதிய பிரபுவிற்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அவரது ஒரே வாரிசு, சிம்பு வால்கா என்றழைக்கப்பட்ட அந்த மகள். தனது தாயின் தீவிரக் கண்காணிப்பில், மிகவும் அடக்கமாகவும் கண்ணியமான முறையிலும் அவள் வளர்ந்து வந்தாள்.

அந்தக் காலத்தில், பௌர்ணமி இரவுகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் வயல்களில் ஒன்று கூடுவது வழக்கம். பயிர்களை அழிக்கும் விலங்குகளை விரட்டுவதற்காக அவர்கள் அங்கு செல்வார்கள். அங்கே புல்லாங்குழல் மற்றும் பல்குழல் இசையோடு இளைஞர்கள் பாடி ஆடுவார்கள்; அங்கேயே அவர்கள் இதயங்களில் காதல் மலரும். ஆனால், சிம்பு வால்காவை இவ்வளவு தாமதமான நேரத்தில் ஒருபோதும் வயல்களில் காண முடியாது. அறுவடைக் காலத்திலும் இளைஞர்கள் மீண்டும் சந்திப்பார்கள்; பூமியின் செழிப்பைக் கொண்டாட பாட்டும் நடனமும் இருக்கும். அப்போதும் சிம்பு வால்கா தன் தந்தையின் அரண்மனையிலேயே தங்கிவிடுவாள்.

காவல் தெய்வங்களின் திருவிழாக்களின் போது மட்டுமே அவள் வெளியே வருவாள். ஏனெனில், அந்த சமயத்தில் சமயக் கடமைகளிலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது. ஆனால் அந்தத் திருவிழாக்களில் கூட, அவள் மற்றவர்களைப் போல முழுமையாக ஆடல் பாடல்களில் ஈடுபட மாட்டாள். குறிப்பாக, இளைஞர்களிடம் பழகும்போது அவள் மிகுந்த கவனத்தையும், ஒரு இடைவெளியையும் கடைப்பிடித்து வந்தாள்.

அண்டை மாகாணத்தில் உட்கா பாக்கர் மற்றும் உட்கா மைத்தா என்ற இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். மூத்தவன் ஒரு போர்வீரன்; தனது படைப்பிரிவின் தளபதி. அவன் தனது துணிச்சலுக்கும் உடல் வலிமைக்கும் பெயர் பெற்றவன்; போர்க்களத்தில் அவன் ஆற்றிய வீரச் செயல்களைப் பற்றி மக்கள் பல கதைகளைக் கூறி வந்தனர். இளைய சகோதரனோ ஒரு விவசாயி; ஆடு மேய்ப்பவன். அவன் பார்ப்பதற்கு அழகான இளைஞனாக இருந்தாலும், அவனிடம் வீரக் கதைகள் ஏதுமில்லை. இருப்பினும், அவன் கடின உழைப்பாளி; அவனது நிலங்கள் எப்போதும் நல்ல விளைச்சலைத் தந்தன.

இந்தச் சகோதரர்களில் மூத்தவனான உட்கா பாக்கர், ஒரு புனிதத் திருவிழாவின் போது அவாபாந்தியின் இளம் மகளைச் சந்தித்தான். அவளுடன் சேர்ந்து சோள மாவு ரொட்டியையும், பலியிடப்பட்ட இறைச்சியையும் உண்ணும் நல்வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அதன் பிறகு, அவர்கள் வாய்னோ நடனம் ஆடியபோது, அவளது விலைமதிப்பற்ற கைகளை அவன் கோர்த்துக்கொண்டான். சிம்பு வால்காவின் அரிய அழகும் மென்மையான குணமும் அந்த இளம் போர்வீரனின் இதயத்தை உடனே கவர்ந்தன.

அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன், அவன் அடிக்கடி அவளது தந்தையின் வீட்டிற்குச் சென்றான். பழங்காலப் போர்வீரர்களின் கதைகளைக் கேட்பது போலவும், படைகளை வெற்றிக்கு வழிநடத்துவது குறித்து ஆலோசனை கேட்பது போலவும் அவன் பாசாங்கு செய்தான். தான் விரும்பிய பெண்ணைச் சிறிது நேரம் பார்ப்பது கூட அவனுக்குக் கடினமாக இருந்தது. எனவே, அந்த முதியவரின் கதைகளைக் கேட்டுத் தன்னைத்தானே தேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

இளையவனான உட்கா மைத்தாவும் அவாபாந்தியின் மகள் மீது காதல் கொண்டிருந்தான். அந்த முதிய பிரபுவைச் சந்திக்க அவனிடம் எந்தக் காரணமும் இல்லாததால், அரண்மனைச் சுவர்களுக்கு வெளியே கவலையுடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருப்பான். தன் சகோதரனைப் போலவே அவனுக்கும் அந்தப் பெண்ணிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவள் நீரூற்றில் தன் குடத்தை நிரப்புவதை பலமுறை பார்த்திருக்கிறான். ஆனால், அந்த நீரூற்று அரண்மனைக்கு மிக அருகிலேயே இருந்ததால், அவன் அவளை நெருங்குவதற்குள்ளேயே, அவனது அழைப்பைக் கூட கேட்காமல் அவள் சுவர்களுக்குள் மறைந்துவிடுவாள்.

ஒருநாள், உட்கா மைத்தா அரண்மனைச் சுவரைச் சுற்றி வந்துகொண்டிருந்தபோது, முதிய பிரபுவுடன் பேசிவிட்டு வெளியே வந்த உட்கா பாக்கரைச் சந்தித்தான். ஒருவருக்கொருவர் விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில், இருவரும் அந்தப் பெண் மீதான தங்கள் காதலை ஒப்புக்கொண்டனர். தாங்கள் இருவரும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதையும் கூறிக்கொண்டனர். இருவருமே தங்கள் காதலை அவள் ஏற்கவில்லை என்பதை உணர்ந்திருந்தாலும், ஒருவருக்காக மற்றவர் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அவர்களுக்குள் சண்டை உருவாவதைத் தவிர்க்க, அவளது தந்தையைச் சந்தித்துத் தங்கள் கோரிக்கையை முன்வைக்க முடிவு செய்தனர்.

அவர்கள் அவ்வாறு செய்தபோது, அந்த முதியவர் யாரிடமும் பாகுபாடு காட்டாமல் ஒரு நிபந்தனையை விதித்தார்: “மலையிலிருந்து இறங்கி வரும் ஒரு குறிப்பிட்ட நீரோட்டத்தின் பாதையை மாற்றி, புதிய கால்வாயை அரண்மனை வாயிலுக்கு நேர் முன்னால் கொண்டு வரும் சகோதரனுக்கே என் மகளைத் திருமணம் செய்து கொடுப்பேன்,” என்று அறிவித்தார். முதியவர் விடுத்த சவால் மிகவும் கடினமானது, ஒருவேளை சாத்தியமற்றதும் கூட. ஆனாலும், போட்டிக்கு வந்த அந்த இருவருக்கும் அதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.

உட்கா பாக்கர் ஒரு பெரிய படையின் தளபதி என்பதால், தனது அதிகாரத்தின் மீது நம்பிக்கை வைத்தான். தன்னிடம் இருந்த பல வீரர்களைத் திரட்டி, காலதாமதம் செய்யாமல் வேலையைத் தொடங்கினான். உட்கா மைத்தாவால் ஒரு சில நண்பர்களை மட்டுமே திரட்ட முடிந்தது. ஆனால் அவன் ஒரு விவசாயி என்பதால், நீர்வரத்துப் பாதைகளை அமைப்பதிலும், அருகிலிருந்த பள்ளத்தாக்குகளில் நீர்ப் பாசனத் திட்டங்களில் ஈடுபட்ட அனுபவமும் இருந்தது. அதன் விளைவாக, அவன் தனது சகோதரனை விட அதிகத் திறமையுடன் புதிய கால்வாயின் பாதையைத் திட்டமிட்டான். வெறும் இரண்டு மாதங்களில், அவன் தண்ணீரை அரண்மனை வாயிலுக்குக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றான். அதே நேரத்தில், அவனது சகோதரன் உட்கா பாக்கரால் தனது அத்தனை வீரர்களுடன் பாதியைக் கூட கடந்திருக்கவில்லை.

அவாபாந்தி தனது வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு, வெற்றி பெற்றவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கத் தயாரானார். ஆனால் உட்கா பாக்கரால் தோல்வியை ஏற்க முடியவில்லை, சிம்பு வால்காவின் மீதான காதலையும் அவனால் கைவிட முடியவில்லை. தனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று அவன் கருதினான். இறுதியில், அவன் தன் சகோதரன் மீதே போர் தொடுப்பதாக அறிவித்தான்.

படை வீரர்களில் அனைவரும் உட்கா பாக்கருக்கு ஆதரவாக இல்லை; பல வீரர்கள் அவனது சகோதரனின் பக்கம் நின்றனர். அந்த ஊரின் இளைஞர்களும் இதேபோல் இரண்டாகப் பிரிந்தனர்; சிலர் உட்கா மைத்தாவின் படையில் சேர்ந்தனர்; மற்றவர்கள் அவனது சகோதரனின் பக்கம் நின்றனர். இரண்டு வலிமையான படைகள் உருவாகி, ஒரு கொடூரமான போராட்டம் தொடங்கியது. பயங்கரமான போர்கள் நடந்தன; அதில் ஒருமுறை ஒரு தரப்பும், அடுத்த முறை மறு தரப்பும் மேலோங்கியது, ஆனால் யாருக்கும் இறுதி வெற்றி கிடைக்கவில்லை. நாட்கள் ஓடின; மாதங்கள் கடந்தன. ஒரு வருடம் கழிந்தது; பின் மற்றொன்று, பிறகு மற்றொன்று எனக் காலம் நகர்ந்தது. இன்னும் சண்டை நீடித்தது, ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நேரத்தில், வயல்களில் விதை விதைக்கவும், அவற்றைப் பராமரிக்கவும் ஆட்கள் மிகக் குறைவாகவே இருந்தனர். அறுவடை மிகக் குறைவாகவும் மோசமாகவும் இருந்தது. மக்கள் பசியால் வாடத் தொடங்கினர். வீரர்களுக்கும் போதுமான உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. இறுதியில், சண்டை சற்றுத் தணிந்தபோது, பட்டினிச் சாவே போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்ற நிலை உருவானது. அப்போது, உட்கா பாக்கர் இந்தச் சிக்கலைத் தீர்க்கத் தன்னுடன் நேருக்கு நேர் ஒற்றைப்போரில் ஈடுபடுமாறு தன் சகோதரனுக்கு சவால் விடுத்தான். உட்கா மைத்தா அதனை ஏற்றுக்கொண்டான்.

ஒப்புக் கொண்டபடி, இரண்டு சகோதரர்களும் சந்தித்தனர்; ஒவ்வொருவர் கையிலும் ஒரு கதாயுதமும், மற்றொரு கையில் ஒரு கேடயமும் இருந்தன. ஆனால் போட்டி தொடங்கப் போகும் தருணத்தில், தனது எதிராளியை விடப் பெரியவனாகவும் வலிமையானவனாகவும் இருந்த உட்கா பாக்கர், இந்தப் போட்டி சமமற்றது என்பதையும், தனது நடத்தை தவறானது என்பதையும் உணர்ந்தான். அவன் தனது ஆயுதத்தைக் கீழே வைத்தான், தனது பிழையை ஒப்புக்கொண்டான், மேலும் தனது சகோதரனுக்கே வெற்றியை விட்டுக் கொடுத்தான்.

உட்கா மைத்தாவிற்கும் சிம்பு வால்காவுக்கும் ஒரு புனிதமான சடங்குடன் திருமணம் நடைபெற்றது. உள்ளூரின் முக்கியப் பிரமுகர்களும், அண்டை மாகாணங்களைச் சேர்ந்தவர்களும் அந்த விழாவில் கலந்து கொண்டனர். அதன் பிறகு, பல பாடல்கள், நடனங்கள் மற்றும் ஏராளமான உணவு மற்றும் பானங்களுடன் விழா களைகட்டியது. அந்தத் தொலைதூரக் காலங்களில் முன்னோர்களின் வழக்கப்படி, கொண்டாட்டங்கள் பல நாட்களுக்குத் தொடர்ந்தன.

ஆனால் உட்கா பாக்கர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. துயரத்தால் வாடிய அவன், தனது வேதனையை வெளிப்படுத்த முடியாமல், ஒரு தொலைதூர மலைக்குச் சென்றான். அங்கே அவன் தனது வாழ்நாளின் எஞ்சிய நாட்களை மிகுந்த துயரத்துடன் கழித்தான்.


 

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி.
சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு – தரப்பகுப்பாய்வு இயக்குனராகப் பணிப்பொறுப்பு.

மொழிபெயர்ப்புக் கதைகளும், கலை இலக்கியக் கட்டுரைகளும் கல்குதிரை, சிறுகதை, தினவு, தடாரி, காலச்சுவடு, சிறுவர்களுக்கான ‘இயல்’ போன்ற இதழ்களில்  வெளியாகியிருக்கின்றன. மாய எதார்த்தக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ‘கடைசி வருகை’ முதல் புத்தகம், மார்ச் 2022-ல்வெளியானது. ‘லத்தீன் அமெரிக்கப் பெண்ணெழுத்து’ எனும் இரண்டாவது மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘கடலோடியின் மனைவி’ 2024 டிசம்பரில் வெளியானது. ‘இயல்திரிபுப் புனைகதைகளின்’ மொழிபெயர்ப்புத்தொகுப்பான ‘சிலந்தி’ டிசம்பர் 2025ல் வெளியாகியிருக்கிறது.
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top